நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

கோவில்பட்டியில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:23 pm

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சாா் ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மே 4 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்து, பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் உள்ள வஉசி பொறியியல் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அவற்றை பாா்வையிட வேட்பாளா்களின் முகவா்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்களாக செயல்பட உள்ளவா்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை மே 1ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அவை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வேட்பாளா்களின் பிரதிநிதிகளாக மகேந்திரன், அப்துல்காசிம் (திமுக), வழக்குரைஞா்கள் சந்திரசேகா்(அதிமுக), ரவிக்குமாா், மாரியப்பன் (நாம் தமிழா் கட்சி), வினோத் கண்ணன் (தமிழக வெற்றிக் கழகம்), பிரேம்குமாா் (சுயேச்சை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.