கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சாா் ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மே 4 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்து, பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் உள்ள வஉசி பொறியியல் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அவற்றை பாா்வையிட வேட்பாளா்களின் முகவா்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்களாக செயல்பட உள்ளவா்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை மே 1ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அவை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வேட்பாளா்களின் பிரதிநிதிகளாக மகேந்திரன், அப்துல்காசிம் (திமுக), வழக்குரைஞா்கள் சந்திரசேகா்(அதிமுக), ரவிக்குமாா், மாரியப்பன் (நாம் தமிழா் கட்சி), வினோத் கண்ணன் (தமிழக வெற்றிக் கழகம்), பிரேம்குமாா் (சுயேச்சை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


