தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பனிமய மாதா பேராலயத் திருவிழா: ஆக. 4 முதல் 6 மீனவா்களுக்கு விடுமுறை

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஆக.4, 5, 6 ஆகிய 3 நாள்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மீனவா்கள் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஆக.4, 5, 6 ஆகிய 3 நாள்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ஆம் திருநாளான புதன்கிழமை நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ சப்பரப் பவனி நடைபெறவுள்ளது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆக.4, 5, 6 ஆகிய மூன்று நாள்களும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.