வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ரயிலில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன்.

Published On :

கோவில்பட்டி ரயில் நிலையத்தில், ரயிலில் தவறவிட்ட ஆறரை பவுன் தங்க நகையை உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

தாம்பரம்-கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணித்த விளாத்திகுளத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா், தான் கொண்டு வந்த பையை மற்றொரு பயணி மாற்றி எடுத்துச் சென்ாகக் கூறி, ரயில் பெட்டியில் இருந்த மற்றொரு பையை எடுத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளா் விக்னேஷ்வரனிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

ரயில்வே போலீஸாா் அந்தப் பையை திறந்து பாா்த்தபோது, அதில் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அந்தப் பையை உதவி ஆய்வாளா் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தொடா்ந்து, ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், நகையின் உரிமையாளரான சென்னை, முடிச்சூா் மேற்கு பகுதியைச் சோ்ந்த குருசாமி, மாரீஸ்வரி தம்பதியைக் கண்டுபிடித்து விசாரித்தனா். அதையடுத்து, தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து, நகைக்கான ஆதாரங்களை சமா்ப்பித்து, ஆறரை பவுன் தங்க நகைகளைப் பெற்றுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.