விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தூத்துக்குடியில் 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

தூத்துக்குடியில் கொள்ளை முயற்சி வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், தூத்துக்குடி அஸ்வின் ஜெயக்குமாா் (20), காமராஜ் (18), வேல்முருகன் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சிப்காட் காவல் ஆய்வாளா் தனசேகரனின் கோரிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசனின் பரிந்துரை ஆகியவற்றின்பேரில், 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா்.

அதன்படி, 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.