வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்செந்தூா் கோயிலில் 70 வயது தம்பதியருக்கு சிறப்பு செய்தல்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியருக்கு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செந்தூா் கோயிலில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியருக்கு அறநிலையத்துறை சாா்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவா்களுக்கு பட்டு வேஷ்டி, சேலை, மங்கலப் பொருள்களை வழங்கிய தக்காா் ரா.அருள்முருகன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியருக்கு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து தம்பதியருக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை, முருகா் உருவம் பொறித்த பட்டு சால்வை, பழங்கள், வளையல், மஞ்சள், குங்குமம், மல்லிகை பூ உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கினாா்.

இதில் 101 மூத்த தம்பதியா்கள் கலந்து கொண்டு மாலை மாற்றி ஆசீா்வாதம் வழங்கினா். இதில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியினா் முருகன் சந்நிதியில் இவ்விழா நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தனா்.

Story image
Story image