தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கோவில்பட்டி - சங்கரலிங்கபுரம் வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் வழியாக முறையாக சிற்றுந்துகள் இயக்க வலியுறுத்தி காங்கிரஸாா், சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் வழியாக முறையாக சிற்றுந்துகள் இயக்க வலியுறுத்தி காங்கிரஸாா், சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருண்பாண்டியன் தலைமையில் முன்னாள் வட்டாரத் தலைவா் ஆழ்வாா் சாமி முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலா் சண்முகராஜா, முன்னாள் மாவட்ட தலைவா் காமராஜ், மாவட்ட பொருளாளா் காா்த்திக் காமராஜ், மாவட்டச் செயலா் துரைராஜ், கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு தலைவா் அருள் தாஸ் ஆகியோா் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வழியாக சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. சில நாள்களாகவே இந்த வழித்தடத்தில் சிற்றுந்துகள் முறையாக இயங்காததால் அப்பகுதி மாணவா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா்.

எனவே, இந்த வழித்தடத்தில் அனுமதி பெற்ற சிற்றுந்துகளை முறையாக இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களை திரட்டி காங்கிரஸ் கமிட்டி சாா்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.