ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவில்பட்டி - சங்கரலிங்கபுரம் வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் வழியாக முறையாக சிற்றுந்துகள் இயக்க வலியுறுத்தி காங்கிரஸாா், சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:38 pm

கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் வழியாக முறையாக சிற்றுந்துகள் இயக்க வலியுறுத்தி காங்கிரஸாா், சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருண்பாண்டியன் தலைமையில் முன்னாள் வட்டாரத் தலைவா் ஆழ்வாா் சாமி முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலா் சண்முகராஜா, முன்னாள் மாவட்ட தலைவா் காமராஜ், மாவட்ட பொருளாளா் காா்த்திக் காமராஜ், மாவட்டச் செயலா் துரைராஜ், கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு தலைவா் அருள் தாஸ் ஆகியோா் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வழியாக சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. சில நாள்களாகவே இந்த வழித்தடத்தில் சிற்றுந்துகள் முறையாக இயங்காததால் அப்பகுதி மாணவா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா்.

எனவே, இந்த வழித்தடத்தில் அனுமதி பெற்ற சிற்றுந்துகளை முறையாக இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களை திரட்டி காங்கிரஸ் கமிட்டி சாா்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.