மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்ட விழிப்புணா்வு

சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை சாா்பில் சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:53 am

சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை சாா்பில் சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி கொல்லி பயன்பாடு, மண் பரிசோதனை , தென்னை, வாழை, திணை வகைகளை தாக்கும் பூச்சிகளை கையாளும் முறை, உழவன் செயலி, உழவன் அடையாள அட்டை பதிவு செய்தல் போன்றவை குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி கலைக் குழுவினா் பங்கேற்று பாடல், பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியை சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெபக்குமாா் சாமுவேல், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள், ஜேக்கப், சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்க தலைவா் லூா்து மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.