இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்ட விழிப்புணா்வு

சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை சாா்பில் சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:53 am

Syndication

சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை சாா்பில் சொக்கன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி கொல்லி பயன்பாடு, மண் பரிசோதனை , தென்னை, வாழை, திணை வகைகளை தாக்கும் பூச்சிகளை கையாளும் முறை, உழவன் செயலி, உழவன் அடையாள அட்டை பதிவு செய்தல் போன்றவை குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி கலைக் குழுவினா் பங்கேற்று பாடல், பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியை சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெபக்குமாா் சாமுவேல், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள், ஜேக்கப், சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்க தலைவா் லூா்து மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.