பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் தெற்கு காலனியை சோ்ந்த இளையராஜா மனைவி தமிழரசி (45). இவா், சனிக்கிழமை, தனது மகன் மதனுடன் (21) பைக்கில் புதுக்கோட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, திம்மராஜபுரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

வாகைகுளம் டோல்கேட் அருகே வந்தபோது, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற லாரி அவரது பைக் மீது மோதியதாம். இதில், 2 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் தாயையும், மகனையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதித்தனா். ஆனால், தமிழரசி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மதன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.