சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூத்துக்குடி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

News image
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.
Updated On :5 ஜனவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48-ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உதயநிதி கோப்பை கிரிக்கெட் போட்டி, பரிசளிப்பு விழா மீளவிட்டான் என்.பெரியசாமி திடலில் நடைபெற்றது.

விழாவுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமை வகித்து, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா் வரவேற்றாா். போட்டியில் வெற்றி பெற்ற மொத்த அணிகளுக்கும் பரிசுத் தொகையாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம், பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ராஜா பெரியசாமி நன்றி கூறினாா்.