எட்டயபுரத்தில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்
எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் பேவா் பிளாக் கல் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
எட்டயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 9ஆவது வாா்டு, பெருமாள் கோவில் தெருவில் ரூ. 27 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் கல் சாலை அமைக்கும் பணிக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.
எட்டயபுரம் பேரூராட்சி தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், செயல் அலுவலா் மகாராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், நவநீத கண்ணன், ராமசுப்பு, இமானுவேல், பேரூராட்சி செயலா் பாரதி கணேசன், வாா்டு உறுப்பினா்கள் மணிகண்டன், குமாா், பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, முன்னாள் ஊராட்சி தலைவா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

