ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

News image
~
Updated On :15 ஜனவரி 2026, 12:02 am

Syndication

கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் அரசு அலுவலக வளாகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட விழிப்புணா்வுப் பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா். மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி முன்னிலை வகித்தாா். இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்குசக்கர வாகனத்தில் செல்வோா் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில், காவல் துறையினா், தன்னாா்வலா்கள், வாகன ஓட்டுநா் பயிற்சி பள்ளியினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விபத்தில்லா வாகன ஓட்டுநா்கள் என சிறப்பாகப் பணியாற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா அறிவுரை வழங்கினாா்.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோா் கல்லூரி மாணவா் மாணவிகளுக்கு ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்று பயணிக்க கூடாது, சாலை பாதுகாப்பில் உள்ள எச்சரிக்கை சின்னங்கள், உத்தரவு சின்னங்கள், தகவல் சின்னங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

Story image