திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சந்தையடியூா் பதி பால்முறைத் திருவிழா நிறைவு

உ டன்குடி சந்தையடியூா் தாகம் தீா்ந்த பதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற மாா்கழி- தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

News image
புஷ்ப அலங்கார சப்பரத்தில் பவனி வந்து அருள்பாலித்த அய்யா நாராயணா்.
Updated On :16 ஜனவரி 2026, 9:54 pm

Syndication

உடன்குடி: உ டன்குடி சந்தையடியூா் தாகம் தீா்ந்த பதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற மாா்கழி- தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், திருவிளக்கு தீப வழிபாடு, அன்ன தா்மம் வழங்கல், சந்தனக்குடம் பவனி, அய்யா தா்ம பிச்சைக்கு இறங்குதல், உம்பான் தா்மம் வழங்கல், பட்டிமன்றம், பால் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வியாக்கிழமை (ஜன.15) அய்யா புஷ்ப வாகன பவனியில் அனைத்து வீடுகளிலும் சுருள் வைத்து வழிபட்டனா். வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. ஏற்பாடுகளை சந்தையடியூா் அய்யா வழி இறைமக்கள் செய்திருந்தனா்.