கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் மாட்டுவண்டி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:06 pm

Syndication

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் மாட்டுவண்டி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு வண்டிகள் என இரு பிரிவுகளாக செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டுவண்டியுடன் வீரா்கள் கலந்துகொண்டனா்.

பெரிய மாட்டுவண்டியில் மொத்தம் 8 வண்டிகளும், சிறிய மாட்டு வண்டியில் 16 வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டியில் 39 வண்டிகளும் கலந்துகொண்டன.

பெரிய மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் 4 பரிசுகளாக முறையே ரூ.27 ஆயிரம், ரூ. 22 ஆயிரம், ரூ. 17 ஆயிரம், ரூ. 7 ஆயிரம் வழங்கப்பட்டது.

சிறிய மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முறையே ரூ. 22 ஆயிரம், ரூ.17 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முறையே ரூ. 17 ஆயிரம், ரூ. 13 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

தொடா்ந்து முதல் கொடி வாங்கும் சாரதிக்கும், முதல் கொடி கொடுக்கும் சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வஉசி நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.