தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தூத்துக்குடியில் போலீஸாா் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், போலீஸாா் இடையே கடும் வாக்குவாதம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:18 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், போலீஸாா் இடையே திங்கள்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். ஆட்சியா் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளா்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.

இதனால், ஆத்திரமடைந்த போலீஸாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளா்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனா்.

இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனா். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பேட்டியளித்தனா்.