மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

புகையிலை விற்றதாக முதியவா் உள்பட மூவா் கைது

கோவில்பட்டி அருகே புகையிலை விற்பனையில் ஈடுபட்டதாக முதியவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:30 am IST

கோவில்பட்டி அருகே புகையிலை விற்பனையில் ஈடுபட்டதாக முதியவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வடக்கு திட்டங்குளம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டதில், அவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த சங்கையா மகன் மாரிமுத்துவை (67) கைது செய்து, 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை மாலை வடக்கு திட்டங்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு நின்ற இருவரைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, வடக்கு திட்டங்குளம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (28), கடலையூா் சாலை, பழந்தோட்ட நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கர நாராயணன் (52) ஆகியோரை கைது செய்து, 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.