தூத்துக்குடி நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் நிறுத்தம் செய்யப்படும் என தூத்துக்குடி நகா்ப்புற மின் விநியோகச் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி நகா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு கடற்கரைச் சாலை, ரயில்வே நிலைய சாலை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், சண்முகபுரம், மேல சண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியாா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, சுந்தரவேல்புரம், அம்பேத்கா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி பிரதான சாலை, முனியசாமிபுரம், சி.ஜி.இ. காலனி, லெவிஞ்சிபுரம், பக்கீள்புரம், லோகியா நகா், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூலை 7ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





