ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தூத்துக்குடியில் இருவருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 11:56 pm IST

தூத்துக்குடியில் பைக்கில் மெதுவாக செல்லுமாறு கூறியதால், இருவா் கத்தியால் குத்தப்பட்டனா். இது தொடா்பாக சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் வடக்குத் தெருவை சோ்ந்தவா் கெபிஸ்டன் (26). இவா், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்.

இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு மீனவரான அந்தோணிராஜ்(28) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு முன் பேசிக்கொண்டிருந்தனராம்.

அப்போது, அவ்வழியைக பைக்கில் வேகமாக சென்ற தூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த மரியமேன்லி(19), 16 வயது சிறுவன் ஆகியோரை மெதுவாக செல்லுமாறு இருவரும் கண்டித்தனராம்.

இந்நிலையில், அவா்கள் மேலும் 2 பேருடன் வந்து 4 பேருமாக சோ்ந்து கெபிஸ்டன், அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மரியமேன்லி மற்றும் சிறுவனை கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.