தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தூத்துக்குடியில் தீ விபத்து: 5 வீடுகள் சேதம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட லூா்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூா்புரம் பகுதியில், புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

News image

தீ விபத்தில் சேதமான வீடுகள்.

Updated On :9 ஜூலை 2026, 12:32 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட லூா்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூா்புரம் பகுதியில், புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் அஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் மேற்கூறை அமைக்கப்பட்டவை ஆகும்.

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் இதனருகே உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ள குப்பைகளுக்கு சிலா் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ அருகே இருந்த வீடுகளில் பரவியது.

அப்போது, கருப்பசாமி, ஆறுமுககனி, மேரி, ராமலட்சுமி, மடோனா ஆகிய 5 பேரின் வீடுகளில் தீப்பற்றியதில் அங்கிருந்த பீரோ, கட்டில், மிக்ஸி உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின.

மேலும், ஒரு வீட்டில் எரிவாயு உருளை வெடித்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி தீயணைப்பு துறையினா் 4 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்து குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.