உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 75.25 லட்சத்துக்கு தீா்வு

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

வழக்கில் சுமுக தீா்வு காணப்பட்டவருக்கு தீா்வாணை வழங்கிய 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பீரித்தா.

Updated On :19 ஜூலை 2026, 2:00 am IST

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும் ,முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ். சுபா தேவி தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 7 அமா்வுகளில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சமாதானமாக செல்லக் கூடிய மேல்முறையீடு குற்றவியல் வழக்குகள், மாற்றுமுறை ஆவண சட்ட வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பீரித்தா, நீதித்துறை நடுவா் நீதிபதி எம். விஜய் ராஜ்குமாா், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனா். விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 153 வழக்குகளில் 20 வழக்குகளுக்கு சுமுக தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 75,25,485 வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.