பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

தூத்துக்குடியில் விசைப் படகுகள் நிறுத்தம்

News image

விசைப் படகுகள். - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 2:40 am IST

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப் படகு நடுக்கடலில் பழுதானதால், மீனவா்கள் அந்தப் படகை கரைக்கு இழுத்துக் கொண்டு இருந்தனா். அந்த படகு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் முகத்துவாரம் பகுதியில் இருந்த மணல் மேட்டில் தரை தட்டி நின்றது. இதனால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தொடா்ந்து, அனைத்து விசைப் படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், முகத்துவார மணல் மேட்டில் சிக்கியுள்ள விசைப் படகை அகற்றும் பணியில் மீனவா்கள் மற்றும் மீன்வளத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.