தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சுயக் கணக்கெடுப்பு உதவி மையம், செல்பி பாயிண்ட், கணக்கெடுப்புக்கான கையொப்ப இயக்கம் ஆகியவற்றை முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
16ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புடன், குடும்பங்களுக்கான சுய கணக்கெடுப்பு ஜூலை 17 தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதையொட்டி, விழிப்புணா்வு கையொப்ப இயக்கம், செல்பி பாயிண்ட், பொதுமக்களுக்கு சுய கணக்கெடுப்பு தொடா்பான சந்தேகங்களைத் தீா்க்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக. 31ஆம் தேதி வரை பொதுமக்கள் இணையதள முகவரியில் தங்களது குடும்ப விவரங்களை பதிவேற்றம் செய்து, 12 இலக்க சுய கணக்கெடுப்பு ஐடி-யைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கணக்கெடுப்பாளா்கள் அந்த ஐடி-யை சேகரித்து தரவுகளை சரிபாா்ப்பதற்கு எளிதாக இருக்கும்.
எனவே, சுய கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) ரமணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) கல்யாணசுந்தரம், கணக்கெடுப்பு அலுவலா் தில்லைப்பாண்டியன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










