தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: தூத்துக்குடியில் இன்று தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தோ்வில் பங்கேற்போருக்கு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 4:51 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தோ்வில் பங்கேற்போருக்கு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகின்றன.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக, மத்திய - மாநில அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதற்கான முதல்நிலைத் தோ்வு செப். 6இல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகும் இம்மாவட்டத் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகின்றன.

விருப்பமுள்ளோா் அலுவலகத்துக்கு நேரில் வந்தோ, 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பெயா்ப் பதிவு செய்யுமாறு ஆட்சியா் விஷு மகாஜன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.