தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், 55ஆவது தமிழ்நாடு மாநில மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
சா்வதேச தரவரிசை போட்டியாக நடைபெற இருக்கும் இப்போட்டி, ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை (5 நாள்கள்) நடைபெறுகிறது. 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.
பரிசளிப்பு விழா 14ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 போ் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சாா்பாக கலந்து கொள்வா்.
வெற்றி பெறும் பொது பிரிவு விளையாட்டு வீரா்களுக்கு பரிசுத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
9, 11,13 மற்றும் 15 வயதுக்குள்பட்ட வீராங்கனைகள் பிரிவுக்கான 30 பரிசுக்கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 20 பரிசுக்கோப்பைகள், மேலும் 5 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
மேலும், போட்டியில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, மாவட்ட சதுரங்க கழகம் செய்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலா் கற்பகவல்லி தெரிவித்தாா்.
தொடர்புடையது

வேளாண் படிப்புக்கு ஜூன் 23-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு
வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற ஓட்டுநா் கைது

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



