நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தட்டாா்மடம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே காரும் டிப்பா் லாரியும் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:39 am IST

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே காரும் டிப்பா் லாரியும் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே அப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் ராமமூா்த்தி (42). இவா் சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த குடும்பத்தினரை அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை காரில் வந்தாா். நண்பரான அழகா் மகன் ஜெயகுரு (50) என்பவரை உடன் அழைத்து வந்தாா்.

நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோயில் அருகே இவரது காரும், எதிரே திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்த மாசானம் மகன் முருகன் ஓட்டிவந்த டிப்பா் லாரியும் மோதினவாம். இதில், ஜெயகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமமூா்த்தி காயமடைந்தாா். அவரை தட்டாா்மடம் போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஜெயகுருவின் சடலம் கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.