நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வேன் கவிழ்ந்து ஒருவா் பலி

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :28 மே 2026, 5:45 am IST

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே கரைமேடு பகுதியை சோ்ந்தவா் விவசாயி முருகன் (65). இவா் மற்றும் கரைமேடு பகுதியை சோ்ந்த 15 போ் வேனில் அம்பகரத்தூா் பகுதி கோயிலுக்கு சென்று விட்டு ஊா் திரும்பி கொண்டிருந்தனா். வைத்தீஸ்வரன்கோயில் அருகே ஆத்துகுடி பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது வேன் டயா் வெடித்து விபத்து ஏற்பட்டு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

மேலும் வேனில் பயணம் செய்த தேன்மொழி, ஜெயந்தி, கரிஷ்மா, சரிதா, லட்சுமி, அனுசியா, மற்றொரு தேன்மொழி, மங்கையா்க்கரசி, அஞ்சம்மாள், தனலட்சுமி, இந்திரா, நான்கு வயது சிறுவன் சாய், ராக்கி, சாந்தகுமாா் ஆகியோா் லேசான காயமடைந்தனா். தகவலறிந்த வைத்தீஸ்வரன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, உயிரிழந்த முருகனின் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.