கோவில்பட்டி, புதுகிராமம், ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில், அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளா்ச்சிக் குழுத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். துணைச் செயலா் மாரிகண்ணன், குழு ஆலோசகா் திருப்பதி கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருநெல்வேலி ஸ்ரீ நாராயண குரு கல்வி, பொதுச் சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் சிவசங்கரலிங்கம், நடராஜன், செந்தில், ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், நினைவு பரிசு, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்பில் காசோலைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல கோவில்பட்டி ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக 35 மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பில் காசோலைகள் வழங்கப்பட்டன. 1330 திருக்குறளை ஒப்பித்த என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி யாசினிக்கு ரூ. 3 ஆயிரம், நினைவு பரிசு வழங்கப்பட்டன.
மகிழ்வோா் மன்ற இயக்குநா் ஜான்கணேஷ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை விநாயக சுந்தரி, இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை முருக சரஸ்வதி, வழக்குரைஞா் முத்துராமலிங்கம், ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு ஆலோசகா்கள் கோமதி சங்கா், கோபாலகிருஷ்ணன், ஜெயக்குமாா், தினேஷ் பாலாஜி, ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழுவின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீ நாராயண குரு கல்வி வளா்ச்சிக் குழு செயலா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். ஆலோசகா் கண்ணன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தமிழில் 100-க்கு 101 மதிப்பெண்கள்: விடைத்தாள் நகலை பாா்த்த மாணவி குழப்பம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தோ்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



