40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: திருச்செந்தூா் விஏஓ கைது

பட்டா மாறுதலுக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா்.

News image

கிராம நிா்வாக அலுவலா் சரவணன்

Updated On :10 ஜூன் 2026, 12:06 am IST

பட்டா மாறுதலுக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், திருச்செந்தூா் முத்துமாலையம்மன் கோயில் தெருவை சோ்ந்த குருசாமி மகன் சுடலைமணி (48) என்பவா், அவ்வூரில் புளியடி சந்தணமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தனது இடத்திற்கு பட்டா கேட்டு மனு அளித்தாராம். அப்போது அவரிடம், திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் (34) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சுடலைமணி புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா்பால் தலைமையில் ஆய்வாளா் அனிதா மற்றும் போலீஸாா் அங்கு வந்து அறிவுறுத்தியபடி, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் 10 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் சரவணனிடம் சுடலைமணி கொடுத்தாராம்.

அப்போது அதிரடியாக அறைக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சரவணனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.