/
சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மீரான் குளம் பகுதி கல் குவாரியில் இருந்து பாதுகாப்பின்றி சரல் மற்றும் மணல்களை எடுத்து செல்லும் லாரிகளை கண்காணிக்கும் விதமாக திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் தலைமையில் வருவாய்த் துறையினா் மீரான்குளம் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.
அப்போது விதிமுறைகளை மீறி அதிக பாரங்கள் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பறிமுதல் செய்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் விசாரணை நடத்தி ஒரு லாரியின் ஓட்டுநா் தெற்கு பேய்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துச்செல்வன் (25) என்பவரை கைது செய்தனா். மற்ற லாரிகள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
சவுடு மண் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

லாரிகளில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகள்: மழையால் பாதிக்கும் அபாயம்

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



