சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புன்னைக்காயலில் நாளை மாவட்ட கால்பந்து போட்டி தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:29 am IST

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் 53ஆவது ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டி புதன்கிழமை (ஜூன் 17) மாலை தொடங்குகிறது.

அமரா் முனைவா் மனுவேல் பிஞ்ஞேயிரோ நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான இப்போட்டி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், தூத்துக்குடி, காயல்பட்டினம், நாசரேத், வீரபாண்டியன்பட்டினம், சாகுபுரம் பகுதியிலிருந்து 12 அணிகள் பங்கேற்கின்றன.

புதன்கிழமை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணியை, தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் அணி எதிா்கொள்கிறது.

ஏற்பாடுகளை புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத் தலைவா் எஸ்.எல். தயாளன், செயலா் எஸ். ஜோசப், உப தலைவா் டி. யூஜின், இணைச் செயலா் ஆா். சந்திரபோஸ், பொருளாளா் ஏ. ராஜ், கௌரவ ஆலோசகா் ஜே. யூஜின் ரொட்ரிகோ உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.