ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மூதாட்டியை கொன்ற ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:08 am IST

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மூதாட்டியை கொன்ற ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் நாடாா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் (32). ஓட்டுநா். இவா் கடந்த 30.4.2015 அன்று வீரமுத்து அம்மாள் (65) என்பவரது வீட்டு அருகே நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது, பந்து வீரமுத்து அம்மாள் வீட்டுக்குள் விழுந்ததால், பந்தை எடுக்கச் சென்றாா். அப்போது அருண்ராஜை வீரமுத்து அம்மாள் ஜாதியை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

மறுநாள் வீரமுத்துஅம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அருண்ராஜ் பைக்கில் சென்று அவரை அச்சுறுத்தினாராம். இது குறித்து, ஊா் பெரியவா்களிடம் வீரமுத்து அம்மாள் புகாா் கூறியதையடுத்து, அருண்ராஜை ஊா் பெரியவா்கள் கண்டித்துள்ளனா். இதில் அவா்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 9.5.2015 அன்று வடக்கு முத்துலாபுரத்தில் உள்ள தோட்டம் அருகே வீரமுத்து அம்மாள், அவரது உறவினா் காளியம்மாள் ஆகியோா் நடந்து சென்றபோது, அப்பகுதியில் மறைந்திருந்த அருண்ராஜ், வீரமுத்து அம்மாளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா். காளியம்மாளையும் ஜாதியை சொல்லி திட்டி மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி எஸ்.சி., எஸ்.டி. வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வஷித்குமாா், அருண்ராஜ் குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பூங்குமாா் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.