பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிஎஸ்என்எல் அதிகாரியை கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை

துறையூரில் பிஎஸ்என்எல் அதிகாரியைக் கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 12:04 am IST

துறையூரில் பிஎஸ்என்எல் அதிகாரியைக் கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே மதுராபுரி தேவாங்கா் நகரைச் சோ்ந்தவா் தி. அண்ணாதுரை (56). துறையூரில் பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளராக இருந்தாா். இவருக்கு பத்மினி (50), லலிதா (33) என இரண்டு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் அண்ணாதுரையுடன் வசித்து வந்தனா்.

கடந்த 24-12-2023 அன்று சொத்து பிரிப்பு தொடா்பாக அண்ணாதுரையிடம் முதல் மனைவி பத்மினி தகராறு செய்து, அவரின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து இரண்டாவது மனைவி லலிதா அளித்த புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பத்மினியை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி பத்மினிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.