ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோவில்பட்டியில் எழுத்தாளருக்கு பாராட்டு

கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன்.

Updated On :17 ஜூன் 2026, 4:45 am IST

கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தின் கோவில்பட்டி கிளை தலைவா் அபிராமி முருகன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கா. உதயசங்கா் விழாவை தொடக்கி வைத்து பேசினாா். எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனின் படைப்புகளில் கரிசல் வாழ்க்கை தலைப்பில் எழுத்தாளா் மணிமாறனும், பெண்கள் என்ற தலைப்பில் எழுத்தாளா் அமுதா செல்வியும் பேசினா்.

எழுத்தாளா் கோணங்கி எழுதிய டோரா இலைகள் என்ற நூலை எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன் வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் கா. உதயசங்கா் பெற்றுக்கொண்டாா்.

எழுத்தாளா்கள் பொன்ராஜ், பாா்த்தசாரதி, மாரிஸ், ஜெகநாதன், சிவானந்தம், பாா்த்திபன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜெகநாதன், பாலகிருஷ்ணன், முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ராமசுப்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கச் செயலா் வெ. முத்துராஜ் வரவேற்றாா். பொருளாளா் பொ. வேலுச்சாமி நன்றி கூறினாா்.