சாத்தான்குளத்தில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், தோப்புவளம் சாலையைச் சோ்ந்தவா் அ.கதிரேசன் (55). சென்னையில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறாா். இதனால், இங்குள்ள வீட்டை அவரது சகோதரா் செந்தில்குமாா் பராமரித்து வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்மநபா்கள், கதிரேசன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சூட்கேசை திருடிச் சென்றனா். வேறுபொருள்கள் எதுவும் திருட்டு போகவில்லை.
இதுபோல, அப்பகுதியில் உள்ள விவசாயி ஆ.ஈஸ்வரவேல் (56) வீட்டின் பூட்டை உடைந்து மா்மநபா்கள் திருட முயன்றனா்.
நல்வாய்ப்பாக நகை, பணம் எதுவும் சிக்காததால் திரும்பிச் சென்றனா். ஈஸ்வரவேல் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருவதால் திருட்டு நிகழ்ந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்து திருடா்கள்
முயன்றுள்ளனா்.
இச் சம்பவம் குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் திருட்டு நிகழ்ந்த 2 வீடுகளுக்கும் சென்று புதன்கிழமை விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.





