ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

போக்ஸோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:36 am IST

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் காா்த்திகேயன் (32). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பிரீத்தா வழக்கை விசாரித்து, காா்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.17,500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.