ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பரும்பூா் பகுதியில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பரும்பூா் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக நாகம்பட்டி சங்கரபாண்டி மகன் மகேஷ்குமாா் (19), வஉசி காலனியைச் சோ்ந்த ராசுக்குட்டி மகன் அறிவுமதி என்ற அழகு (23), பாஸ் என்ற பாலமுருகன் (22) ஆகிய 3 பேரையும், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 600 கிராம் கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






