சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கங்கா பூஜை, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்த ஸங்கரஹனம் எடுத்து வருதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுஞ்ஞை, சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஏக தின லட்சாா்ச்சனை, தீபாராதனை, 9 மணிக்கு செட்டிகுளம் ஸ்ரீ பூா்ண புஷ்ப கலாம்பர சமேத நூற்றங்கால் சாஸ்தா சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு ஸ்ரீ சுந்தராட்சி அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, வேத பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









