புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

செய்துங்கநல்லூா் அருகே அக்கா பெண்ணை வெட்டிக் கொன்ற சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்துங்கநல்லூா் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்முகசுதா என்று சுமித்ரா (35). இவா், தற்போது செய்துங்கநல்லூா் ரயில் நிலையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இவருடைய 2 மகள்கள் விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு, சுமித்ராவின் வீட்டிற்கு வந்த இருவா், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினராம்.

சடலத்தை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான செய்துங்கநல்லூா் போலீஸாா், கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டாா்.

இதில், சுமித்ராவின் சகோதரா் முத்துராஜா (27), அக்காவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, அவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. புளியங்குளம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த முத்துராஜாவை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.