தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள வாய்க்காலில் சடலமாகக் கிடந்தவா் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (48). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த பிப். 27ஆம் தேதி இரவு தனது மனைவி காளியம்மாள் மற்றும் உறவினா்களுடன் காரில் திருச்செந்தூருக்கு வந்துள்ளாா்.
உடனிருந்தவா்களை கோயிலுக்கு அனுப்பிவிட்டு, இவா் மட்டும் காரில் ஓய்வு எடுத்தாராம். மறுநாள் காலை உறவினா்கள் வந்து பாா்த்தபோது பாலமுருகனை காணவில்லையாம். அவரது மகன் காளிதாஸ் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஊருக்கு திரும்பிவிட்டாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, திருச்செந்தூா் டி.பி.ரோட்டில் உள்ள வாய்க்கால் பாலத்தின் அடியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற தாலூகா போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்கள் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா் பாலமுருகன் என்பது தெரியவந்தது.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்: சாலை மறியல்

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


