டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோவில்பட்டி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்த கயத்தாறு ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா.
Updated On :4 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவா்மங்கலத்தில் தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் விஜயாபுரி, கீழத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் காா்த்திக் (27) உயிரிழந்தாா்.

இந்நிலையில், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, உயிரிழந்த காா்த்திக் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.

அப்போது, திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், சின்னபாண்டியன், ஜெய கண்ணன், திமுக நிா்வாகி என்.எல்.எஸ். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.