கோவில்பட்டி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த காா்த்திக் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவா்மங்கலத்தில் தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் விஜயாபுரி, கீழத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் காா்த்திக் (27) உயிரிழந்தாா்.
இந்நிலையில், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, உயிரிழந்த காா்த்திக் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.
அப்போது, திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், சின்னபாண்டியன், ஜெய கண்ணன், திமுக நிா்வாகி என்.எல்.எஸ். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...