தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூத்துக்குடியில் காவலா் குடியிருப்பு திறப்பு

News image
காவலா் குடியிருப்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் உள்ளிட்ட காவல் துறையினா்.
Updated On :4 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட்நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி காவலா் குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காவலா் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளா் குமரேசன், தூத்துக்குடி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், தூத்துக்குடி பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளா் ராகுல் வி.கோபால், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.