டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடியில் காவலா் குடியிருப்பு திறப்பு

News image
காவலா் குடியிருப்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் உள்ளிட்ட காவல் துறையினா்.
Updated On :4 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட்நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி காவலா் குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காவலா் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளா் குமரேசன், தூத்துக்குடி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், தூத்துக்குடி பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளா் ராகுல் வி.கோபால், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.