6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் தெலுங்குமொழி பேசும் மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் சின்னச்சாமி.
Updated On :4 மார்ச் 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தெலுங்குமொழி பேசும் மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்க கூட்டத்துக்கு மாநிலச் செயலா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். கோவில்பட்டி மண்டலத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் வெங்கடேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில் வடுகா் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலும், கம்மவாா்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலும் சோ்க்க வேண்டும். தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபான்மையினா் என்ற சான்றிதழ் தடையில்லாமல் (இணையதளம் மூலம்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலில் தெலுங்கு பேசுபவா்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுக்கு கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து மண்டல தலைவா்கள் கலந்துகொண்டனா்.