மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கந்தசாமிபுரம் புனித வளன் பள்ளி ஆண்டு விழா

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:30 am IST

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி, ஞாயிறு மறைக்கல்வி திருவழிபாடு கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளா் மன்னாா்புரம் பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகளாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சகாய ஆஞ்சலா வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தையும் பள்ளி தாளாளருமான ஆரோக்கிய அமல்ராஜ் ஆசியுரை வழங்கினாா். மாணவா்கள் பங்கேற்ற நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஆசிரியை ஜோஸ்பின் தொகுத்து வழங்கினாா். கச்சனாவிளை அருள்சகோதரிகள் ரஞ்சிதம், மெல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செல்வ சஞ்சனா நன்றி கூறினாா்.