நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின் (42). இவா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்கூட்டியில் காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, சாத்தான்குளம், கருமேணி ஆற்றுப்பாலம் அருகே பின்னால் வந்த வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரோஸ்லின் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் மணியிடம் விசாரித்து வருகின்றனா்.