ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:47 pm

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின் (42). இவா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்கூட்டியில் காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, சாத்தான்குளம், கருமேணி ஆற்றுப்பாலம் அருகே பின்னால் வந்த வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரோஸ்லின் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் மணியிடம் விசாரித்து வருகின்றனா்.