நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது

News image
கோப்புப் படம்- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடா்பாக அசோக் என்ற அய்யாதுரை (27), வேல்முருகன் (34), ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்குத் தொடா்பாக தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கதுரை என்ற தங்கையா (22) ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோவில்பட்டி மேற்கு, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அவரது பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவு ஆகியவற்றின்பேரில் அசோக் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.