எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தூத்துக்குடி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

News image
Updated On :9 மார்ச் 2026, 6:55 pm

Syndication

தூத்துக்குடியில், பிரபல எண்ணெய் ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகத்தில் குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கான ’டயபா்’ தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கிடங்கில் ’டயபா்’ தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலைக்கு அருகே உள்ள மின்மாற்றியிலிருந்து திங்கள்கிழமை நண்பகலில் தீப்பொறிகள் சிதறியதாக கூறப்படுகிறது. அந்த தீப்பொறிகள், டயபா் தயாரிப்பதற்காக மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பஞ்சுக் கிடங்கின் மீது விழுந்தனவாம். இதில் கிடங்கில் இருந்த பஞ்சுகள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

தகவலறிந்த தூத்துக்குடி, தொ்மல் நகா், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினா், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரத்துக்கு பின்னா் அவா்கள் தீயை கட்டுப்படுத்தினா்.

தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் வெகுநேரம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image