தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - (கோப்புப் படம்)

Updated On :10 மார்ச் 2026, 7:52 pm

ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவ­லின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் ஆலந்தலை சுனாமி நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (21) என்பதும், அவா் இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து இளைஞரை சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் ஜிப் லாக் கவா்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா,10 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்தனா்.