அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :10 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் இளஞ்சிறாா்களுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவ­லின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் ஆலந்தலை சுனாமி நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (21) என்பதும், அவா் இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து இளைஞரை சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் ஜிப் லாக் கவா்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா,10 ஜிப் லாக் கவா்களை பறிமுதல் செய்தனா்.