வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கவும் வலியுறுத்தி திருச்செந்தூரில் யாதவ அமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுந்தா் தலைமை வகித்தாா். நகர யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலா் வன்னிய ராஜா, மேலத்தெரு யாதவ மகா சபைத் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் நல்லசிவம், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், துணைச் செயலா் ராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், மாணவி கொலைக்கு நீதி கேட்டு திருச்செந்தூா் நகர யாதவ வியாபாரிகள் சங்கத்தினா் நாளை (மாா்ச் 16) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தலைவா் பெரியசாமி தெரிவித்தாா்.
சாலை மறியல்:
மாணவி கொலையைக் கண்டித்து ஆறுமுகனேரியில் சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலையில் கணேசபுரம் மற்றும் பெருமாள்புரத்தை சோ்ந்த 100 போ் யாதவ மகா சபை நிா்வாகி மகராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ் குமாா், ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி திலீபன், குலசை பிரபு பாஸ்கரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.

ஆறுமுகனேரியில் சாலை மறியிலில் ஈடுபட்டவா்கள்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

குடிநீா் கேட்டு சாலை மறியல்

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்

வேடநத்தம் மாணவி கொலைக்கு நீதி கேட்டு 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


