ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே தாய், மகளை அரிவாளால் வெட்டியதாக ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானமலா். இவரது மகளான மரிய ஜெபராணி கடந்த 2 நாள்கள் முன்பு அதே பகுதியில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனை பூச்சிக்காடு விலக்கு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லிங்கதுரை ( 65) கண்டித்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஏற பூச்சிக்காடு விலக்கு பகுதிக்கு வந்த ஞானமலா், மரிய ஜெபராணி ஆகியோருக்கும், லிங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், லிங்கதுரை அரிவாளால் இருவரையும் வெட்டியதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த இருவரும் திசையன்விளை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் தட்டாா் மடம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு ) இசக்கிதுரை வழக்குப் பதிந்து லிங்கதுரையை கைது செய்தாா்.