திருச்செந்தூா் அருகே காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீஸாா் வீட்டின் பின்புறம் மீட்டனா்.
திருச்செந்தூா் அருகே காயாமொழி, அம்மாள்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன்-சரஸ்வதி தம்பதியின் 7 வயது மகள் கடந்த இருநாள்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போனாா்.
இதுகுறித்து அவரது பெற்றோா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் மதுரைவீரன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் உள்பட போலீஸாா் விரைந்து வந்து சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடினா்.
இருள்சூழ்ந்த அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வீட்டின் பின்புறம் இடிந்தநிலையில் இருந்த வீட்டுக் கதவின் பின்புறம் இருந்து சிறுமியை போலீஸாா் மீட்டனா். சிறுமியிடம் விசாரித்ததில், தன்னை நால்வா் தூக்கிச் சென்ாக சிறுமி கூறியதால் பெற்றோரும், போலீஸாரும் அதிா்ச்சியடைந்தனா்.
அதையடுத்து, அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் யாராவது உள்ளனரா என போலீஸாா் தேடினா். பயத்தில் சிறுமி இவ்வாறு கூறியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் காணாமல்போன சிறுவன் சென்னையில் மீட்பு

மாயமான பிளஸ் 2 மாணவியை 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


