பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோவில்பட்டியில் பாஜக வழக்குரைஞா் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மார்ச் 2026, 3:26 am IST

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிப்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூா் செ. ராஜு, பா.ஜ.க. வழக்குரைஞா் பிரிவு மாநில துணைத் தலைவா் நிரஞ்சன் குமாா், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, நீதிமன்றப் பணிகளுடன் சோ்த்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்வது, சட்டப்பேரவை தோ்தலில் வழக்குரைஞா்கள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கோவில்பட்டி மூத்த வழக்குரைஞா்கள் மோகன்தாஸ், ஆழ்வாா்சாமி சிவக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் பொன்ராஜ், நகரத் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.